Tuesday, September 28, 2010

பாதியில் முடிந்த கதை !

பழம்பெரும் நடிகரின் பெயரை சொல்லி பெய்யத்துவங்கியது மழை. செயற்கை பூக்கள் பூக்கத்தொடங்கின. சிலர் அந்த பூக்களுக்குள் அடைக்கலம் புகுந்து நகரத்துவங்கினர். பாதையோரக் கடைகளின் கூரைகளின் கீழ் இடம்தேடி ஓடினர் இன்னும் சிலர். சாலையோரம் சேறாக மாறிக்கொண்டிருந்தது. சலவைத்தூள்களுக்கு சவால் விட தம்மை தயார் படுத்திக்கொண்டிருந்தனர் சில பள்ளிச்சிறார். அந்த மழையிலும் ஐஸ்கிரீம் குடித்துக்கொண்டிருந்தனர் இன்னும் சிலர். மரங்கள் தம்மைக்குலுக்கி குதூகளிக்கத்துவங்கின. சாலையில் தேங்கியிருந்த நீரைப்பிரித்துகொண்டு வந்துகொண்டிருந்தது அந்த மோட்டார் சைக்கிள். மழை நீர் நனைக்குமுன் ஒதுங்கிவிட்டோம் என பெருமைப்பட்டுக் கொண்டிருந்தவர்களை நனைத்த பெருமையோடு அவர்களின் சாபத்தையும் கேட்க நேரமின்றி தெரு முனையை நோக்கி விரைந்துகொண்டிருந்தது அந்த சைக்கிள்.

வசீகரன் என்ற பெயருக்கு ஏற்றவன் போல் இருந்தான் அந்த சைக்கிளை ஒட்டிக்கொண்டிருந்த அவன். தியேட்டரில் படம் துவங்க இன்னும் 10 நிமிடங்களே இருந்தன. கடிகார செக்கன் முள்ளுக்கு போட்டியாக வண்டியை ஒட்டிக்கொண்டு தெரு முனையை நோக்கி விரைந்துகொண்டிருந்தவன் அப்போது தான் அதை கவனித்தான். சிக்னலில் பச்சை நிறம் காலாவதியாக இன்னும் 2 செக்கன்களே இருந்தன. வேகமாக வலக்கை பிடியை முறுக்கத்துவங்கியும் தோற்றுப்போனான். திடீரென அவன் அடித்த பிரேக் அவனுக்கு சார்பு வேகத்தின் செயன்முறை விளக்கத்தை சொல்லிக்கொடுத்தது.

அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இரண்டு நிமிடங்கள் எடுத்தான் ஆனந்த். அவசரமாக ரயிலைப்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவன் ஆர்வக்கோளாரில் பாதையைக் கடக்க முயன்று இப்போது வசீகரனின் வண்டிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். ஒரு அங்குலம் கடந்திருந்தாலும் இப்போது அவனது புகைப்படம் அவன் வீட்டுச்சுவரில் தொங்கிக்கொண்டு இருந்திருக்கும். ஏதோ வசீகரன் நான்கு வருடங்களாக சைக்கிள் ரேசில் ஓடிப்பழகிய அனுபவமும் லாவகமும் அவனை காப்பாற்றியிருந்தது.

அந்த இடம் அமைதியாக இருந்தது. இருவருக்கும் வார்த்தை வர மறுத்தன. தன் தவறை  உணர்ந்துகொண்ட ஆனந்த் இனியும் அவ்விடத்தில் இருக்க இஷ்டமின்றி பாதையை விரைவாக கடந்து மறுகரையை அடைந்தான். அப்போது ஒரு பெண் அவனை கடந்து சென்றாள்.

கவிதா ஒரு அழகிய கவிதையே தான். அவளைப் பார்த்ததும் விக்கித்து திக்கித்து சற்றுமுன் தான் சந்தித்த அதிர்ச்சிக்கு எவ்வாறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தினானோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாது உணர்ச்சிகளையும் பாவங்களையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கொண்டிருக்க அதைக்கண்ணுற்றும் கணக்கின்றி தன் செல்பேசியில் கொஞ்சு தமிழ் பேசிக்கொண்டு அவனை கடந்து சென்றுகொண்டிருந்தாள் 

என்று கூகிள் transliteration  இல் கதை வளர்ந்துகொண்டிருக்கும் போது ஏதோ ஒரு கோளாறில் உலாவி இயங்க மறுத்து மீண்டும் refresh பண்ணும்போது எழுதியவை அழிந்துபோயிருந்தன...!

Friday, September 24, 2010

ஏதாவது போடுங்க சார்.....!



சூரியன் உச்சந்தலையில் ஸ்ட்ராவை போட்டு மனுசன்கிட்ட இருக்கிற சக்தியை எல்லாம் உறிஞ்சுற மாதிரி அப்பிடி ஒரு வெயில்...வியர்த்து விறுவிறுத்து நா வறண்டு தண்ணி தண்ணி என்று தண்ணி கேக்குற அளவுக்கு அலைஞ்சு திரிஞ்சு பம்பலபிட்டி mc க்கு முன்னால பெரேரா அண்ட் சன்ஸ்
 ஓரமாக ஒதுங்கினான் அரவிந்த்.....வெள்ளைக்காரன் ஏதோ குளிருக்கு தாக்கு பிடிக்க முழுக்கை ஷர்ட், அதை இறுக்கி பிடிக்க ஒரு டை கண்டுபிடிச்சிருப்பான்...அத இந்த வேகாத வெயிலில போட்டு திரியுற கொடுமையையும் போதாததற்கு அனுபவித்துக்கொண்டிருந்தான்...முகத்தை கழுவினாக்கூட இவ்வளவு தண்ணீர் முகத்துல ஒட்டியிருந்து பார்த்திருக்க முடியாது....அவ்வளவு வியர்வை.....என்னத்த சொல்லுறது...சேல்ஸ் ரெப் அப்படின்னு சொன்னாலே நாய் பொழைப்பு தானே.... கையில இது போதாதுன்னு ஒரு பெரிய பை...அதுவே ஒரு 5 கிலோ  பாரமிருக்கும்...அதுக்குள்ளே இருக்கிற லொட்டு லொசுக்கு சாமான்கள வீடு வீடா போய் வித்தா தான் இவனுக்கு சாப்பாடு.....யார் மூஞ்சில முழிச்சானோ....இதுவரைக்கும் அன்றைய நாளில ஒன்னும் தேரல....!

மாசக்கடைசி .....பொருளாதாரமும் ரொம்ப வீக்கு...... டார்கெட் அது இதுன்னு மேனேஜர் அடிக்கடி கண்ணு முன்னால வந்து பயமுறுத்துற காட்சிகளையும் இடைநடுவே அனுபவித்துக்கொண்டிருந்தான் அவன்....ஒரு கூல்ட்ரின்க் குடிச்சா நல்லா இருக்குமே எண்டு யோசிச்சவனுக்கு பாக்கெட்டில் கையை விட்டு பார்த்ததும் ஏமாற்றமே மிஞ்சியது.....அடடடா...20 தானே இருக்கு.......அதிலையும் பத்து ரூபா கண்டிப்பா பஸ்சுக்கு வேனும்....இன்னும் 10  ரூபாக்கு குடிக்கிறதுக்கு  வாங்கிற பொருள் ஒண்ணுமே இலங்கை பொருளாதாரதுலையே இல்ல..... இப்படி கண்ணா பின்னான்னு யோசிச்சுகொண்டிருக்கும்போதே ஒரு சின்னப்பெண் அவன் முன்னாள் வந்து கையை நீட்டினாள்.
" என்னது" ?
"எதாவது போடுங்க சார்" சிறுமி சொன்னாள்..
" ஒண்ணுமில்ல போ  "
அவள் போகாமல் மீண்டும் தொந்தரவு பண்ணிக்கொண்டே இருந்தாள்
அந்த நேரம் பார்த்து ஒரு அழகிய பெண் அந்த பக்கம் வந்து அவனருகில் நின்றாள்.. யாருக்காகவோ காத்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது.....

" அண்ணா அண்ணா எவ்வளவாவது போடுங்க அண்ணா " சிறுமி சத்தத்தை அதிகரித்தாள்... திடீரென காலிலும் விழுந்தாள்...
என்னா டெக்னிக்கா பிச்சை கேக்குறாப்பா...என்று மனதில் நினைத்துக்கொண்டவனுக்கு இப்போ அருகில் ஒரு பெண் இத பார்த்துக்கொண்டிருப்பது அவன் தன்மானத்தை தூண்டியது....

"சரி சரி எழும்பு....இந்தா புடி " என்று கொடை வள்ளலானான்...
அந்த சிறுமியும் 20  ரூபாவை வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை நோக்கி சென்றாள்

அந்த பெண் காத்திருந்தது இன்னொரு பையனுக்காக...
அந்தச்சிறுமி அப்பெண்ணிடம் போய் கையை நீட்டும் தருணத்தில் அவளது ஆள் அங்கு வந்து சேர்ந்தான்...உடனே அவள் அவனது காலிலும் விழுந்தாள்....
அந்தப் பையன் ஒரு 5  ரூபாவை எடுத்து அவளிடம் கொடுக்க முனைகையில் அந்தப்பெண் தடுத்தாள்....
" ( மேகிட தென் தமாய் அர கொல்லா 20 துன்னே ) இவளுக்கு இப்போ தான் அந்த பொடியன் 20  குடுத்தான்....
(மேகி பொரு கியன்னே) இவா போய் சொல்லுறா..." என்று அவன் கொடுக்க நினைத்ததையும் தடுத்து அவனை பெரேரா அண்ட் சன்ஸ் உள்ளே கூட்டிட்டு போனாள்

ஆஹா அநியாயமா 20 ரூபா போச்சே...எனக்கு இந்த வறட்டு கௌரவம் தேவையா என அரவிந்த் நொந்து கொண்டிருக்கும் போதே....அந்த சிறுமி கடையினுள் நுழைந்தாள்... ஆஹா நிறைய ஜோடி உள்ளே இருக்காங்க இவளுக்கு செம வேட்டை தான் இன்னைக்கு என்று நினைத்துக்கொண்டு உள்ளே என்ன நடக்குதெண்டு பார்க்கத்திரும்பினான்.....

அந்தச்சிறுமி ஒரு நூறு ருபாய் நோட்டை நீட்டி....ஒரு மைலோவும் ஒரு சாக்லேட் கேக்கும் வாங்கி வெளியே வந்தாள்....
அரவிந்த்தை கண்டு சின்னதாக ஒரு புன்னகையை தூவிவிட்டு நடந்தாள்...
அரவிந்து....அப்புடியே ஷாக் ஆகிட்டான்.....அவன் அதிலிருந்து மீள்வதற்கு ஒரு சின்னப் பையனின் கை உதவியது....

" ஏதாவது போடுங்க சார்...."