Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு

இன்னொரு படத்தின் முதல் நாள் முதல் காட்சி. முதல் ஆச்சரியமாக படத்தின் தலைப்பு எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி சாதாரணமாக காண்பிக்கப்பட்டது. அடுத்த ஆச்சரியம் சூர்யா.

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என ஏகப்பட்ட சுமைகளை சுமந்ததாகவே தெரியவில்லை உலகநாயகன். அவ்வளவு சாமர்த்தியமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது திரைக்கதை.

கதையை சொல்லுவதற்கு இஷ்டமில்லை ஏனெனில் சுவாரஷ்யம் இல்லாதுவிடும். ஆனாலும் ஒரு சில பாத்திரங்களை மட்டுமே கொண்டு படைக்கப்பட்ட படம் என்னைக் கவர்ந்தது. முதல் பாதியில் அவ்வளவாக சுவாரஷ்யங்கள் இல்லையெனினும் இடைவேளையின் பின்னர் சிரிப்புக்கு உத்தரவாதம். ஆனால் எனக்கிருக்கும் சந்தேகம் எல்லோருக்கும் இரண்டாம் பாதியும் அதில் வரும் நகைச்சுவையும் புரியுமா என்பதுதான். வசனங்கள் கமல் என்பதால் ஒரு ஜோக்குக்கு சிரிச்சாலும் தொடர்ந்து வரும் ஜோக்குகளை தவறவிடும் அபாயம் இதிலும் தொடர்கிறது.

அவருக்கே உரிய கருத்துக்கள் இடையிடையே தூவப்பட்டு ரசிக்க வைக்கின்றன. சர்ச்சையில் சிக்கியதாக சொல்லப்படும் கவிதை காட்சி தான் என்னைப்பொறுத்தவரை கதையின் இதயம் என்பேன்.படத்தோடு கேட்கும்போது கமலின் வரிகளில் தான் எத்தனை உண்மை எத்தனை வலிமை. எழுத்தாளர் கமலிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன். நீலவானம் பாடல்காட்சி ஒரு வித்தியாசமான எல்லோரும் பார்க்க வேண்டிய அதே நேரம் உணர்வுகளை தூண்டக்கூடிய பாடல். ஒரே பாடலில் கடந்த காலத்தை ரீவைண்ட்  செய்து காட்டிய எண்ணத்திற்கு ஒரு சபாஷ். தகிடுதத்தோம் பாடல் ஒன்றே கதையை சொல்லிவிடும்:) இன்னும் நிறைய எழுதலாம் ஆனால் கதை வெளிவந்துடும். அதனால நான் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.

மாதவனுக்கு தான் அதிகமாக நடிக்க இருக்குதுபோல ஏன்னா அவருதான் படத்துல முக்கால்வாசி நேரம் தண்ணில மிதக்குறாரு. அதுவும் தண்ணில மிதக்கும் நகரத்துல அவரு தண்ணில மிதக்குற காட்சிகள் அருமை. mr & mrs kurup  நல்ல முயற்சி. ஊர்வசியின் நடிப்பு சொல்லவே வேண்டியதில்ல. ரமேஷ் அரவிந்த் தானா அதுன்னு கண்டுபுடிக்கவே முடியல.

எப்போதும் போல கமலோட நடிப்பு அவ்வளவு இலகுவா யாரால முடியம், த்ரிஷாவோட தமிழும் குரலும் அழகு. சங்கீதாவும் தான் பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். இதில் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது அந்த  MSC cruise.  ஒரு அழகிய கப்பல்...

இன்னொரு விஷயம் மறந்தே போயிட்டேன் அந்த சின்ன பையன். சங்கீதாவோட மகனா நடிக்கிற பையன் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கு. இலங்கைத்தமிழ் பேசும் ஒரு குடும்பம் இருக்கு, நீண்ட நாளைக்கு பிறகு இந்திய சினிமாவில் உண்மையா இலங்கைத் தமிழ் பேசும் ஒரு ஜோடி.

லைவ் ரெக்கார்டிங் முறையில் பதிவு செய்யப்பட்ட  படம், உண்மையாகவே அதில் உள்ள சிரமங்கள் தெரியவில்லை.. அந்தளவு நேர்த்தி..தேவிஸ்ரீ பிரசாத் பின்னணியில கலக்கிட்டாரு. ஒளிப்பதிவு யாருன்னு ஞாபகம் இல்ல ஆனால் நல்லா இருந்துச்சு.ஒரே கவலை கடைநிலை ரசிகனுக்கு இந்த படம் புரியுமா, புடிக்குமா என்பதுதான். நீலவானம்,தகிடுதத்தோம்  பாடல் தவிர மற்ற பாடல்கள் எல்லாம் பின்னணி.வேற என்ன சொல்ல எல்லாரும் போய் படத்த பாருங்க...சந்தோசமா இருங்க.. நானும் கண்டிப்பா இன்னொரு தடவை பார்க்கணும்.

5 comments:

  1. நல்லா இருக்கு. முழு நேர பதிவராகிடீங்க போல இருக்கு.

    ReplyDelete
  2. @ kangon :)
    @ sujeivan - ellam pathiwar santhippu senja welai :)

    ReplyDelete
  3. கமலும் மாதவனும் போட்டி போட்டுக் கலக்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். பார்க்க வேண்டும்..

    ReplyDelete
  4. Good review, mate. I agree with it to a certain extent.

    I watched in a quite ordinary cinema theatre, which claims it has DTS. But the audio did sound too low and compromised. Was the live recording also one of the causes for it?

    ReplyDelete