ரயில் தண்டவாளம் போல்
நானும் காதலும்...
தூரத்தில் சேர்வதுபோல் மாயை
நிஜத்தில் அது தூரமாய்.....
இலவு காத்த கிளி போல்
நானும் காதலும்...
பழுக்கும் வரை காத்திருந்தால்
பறக்கிறது பஞ்சாய்........
இலங்கையும் தமிழரும் போல்
நானும் காதலும்...
போராடிப் பார்த்தபின்னும்
பிடிபடவில்லை இன்னும் .......
இத்தனையும் நடந்தாலும்
நானும் காதலும்...
விடுவதாய் இல்லை
காதலிப்பதை நானும்.....
கைவிடுவதை அதுவும்......
Subscribe to:
Post Comments (Atom)
WIL C
ReplyDelete